Search This Blog

Jun 15, 2020

வேண்டாத விருந்தோம்பல் (அ ) உயிர் உதிர் காலம்.

வேண்டாத விருந்தோம்பல் (அ ) உயிர் உதிர் காலம்.


விருந்தோம்பல் தமிழரின் பண்பாடு! 

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று புகழ் பெற்ற  தமிழர் தலைநகரின் மக்கள், இன்று கொரோனா நோயை விரும்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்  - அரசு அறிவித்திருக்கும் எந்தக் கட்டுப்பாட்டையும் மதிக்காமல் !  

பாதிப் பேர் முகக்கவசம் அணிவதே இல்லை! 

அப்படி அணிந்தாலும் முகத்தையும் மூக்கையும் மறைத்து  மாட்டாமல் கழுத்தைச் சுற்றி தொங்கவிட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

இதற்கு  முன்பு "தலைக் கவசம் அணிந்துதான் இருசக்கர ஊர்திகள் ஓட்டவேண்டும்"  என்ற விதிமுறையை " மயிர் உதிர்ந்துவிடும்" என்று காரணம் கூறி மீறித் திரிந்தார்கள்.

இன்று முகக் கவசம் அணியாமல் இருந்தால் " உயிர் உதிர்ந்துவிடும்" என்று எப்போது உணருவார்கள்?

ரமேஷ் 







வேண்டாத விருந்தோம்பல் 

மருந்தில்லா நோயொன்று மாந்தரைக்  கொன்று 
விருந்துண்ண வந்துள்ள தின்று - விரும்பி 
விருந்தோம்பல் செய்கிறார் மூக்கைத்  திறந்து   
திரிகின்ற மூடர்  அதற்கு 
                                                                             (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)



4 comments:

  1. Very correct. I see people roaming without masks throwing caution to the winds and repent later.

    ReplyDelete
    Replies
    1. Not only they suffer but make others also suffer - much like the smokers, only this is worse!

      Delete