கரோனா பாடல்- 2
உலகெங்கும் கரோனா கிருமியின் தாக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
இதன் தாக்குதலிலிருந்து தப்பிக்க முக்கியமான இரண்டு யுக்திகள் -
1. கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்; மற்றவரோடு கையை
குலுக்காதீர்கள்;கைகளால் முகத்தை தொடுவதை தவிருங்கள்.
குலுக்காதீர்கள்;கைகளால் முகத்தை தொடுவதை தவிருங்கள்.
2. மற்றவர்களின் இருமல், தும்மல் இவைகளின்போது வெளிவரும் கிருமிகளைத் தவிர்க்க , வாய், மூக்கு இவற்றை மறைக்கும் முகமூடியை அணியுங்கள்
என்பதாகும்.
இவற்றை வற்புறுத்தும் கருத்தூது ஒரு வெண்பா.
அன்புடன்
ரமேஷ்
கொரானா கிருமிக் குழுமத்தின் தாக்கம்
வராமல் இருக்க வழியுண்டு - ஆட்டக்கை *
நீட்டாம லேயிருந்து மூடி முகமறைத்தால்
வாட்டாது நோயென் றறி.
*ஆட்டக்கை= கையை ஆட்ட, கையை குலுக்க எனப் பொருள் கொள்க
வராமல் இருக்க வழியுண்டு - ஆட்டக்கை *
நீட்டாம லேயிருந்து மூடி முகமறைத்தால்
வாட்டாது நோயென் றறி.
*ஆட்டக்கை= கையை ஆட்ட, கையை குலுக்க எனப் பொருள் கொள்க
** மூடி முகமறைத்தால் = முகமூடி (mask ) அணிந்தால்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
நல்ல அறிவுரை
ReplyDeleteஅருமை அருமை
ReplyDelete