Search This Blog

Nov 24, 2019

பிரதோஷப் பாடல் - 27

பிரதோஷப் பாடல் - 27

அவினாசி அப்பன்


இன்றைய பிரதோஷப் பாடல் அவிநாசியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைப் பற்றியது.
இத்தலத்தில் வசித்து வந்த தம்பதிகளின் ஒரே மகன் குளத்தில் நீராடுகையில் முதலையால் விழுங்கப்பட்டு உயிரிழந்தான். மகனை இழந்து வாடும்  பெற்றோரைப் பற்றி அறிந்த சுந்தரர், அவன் உயிரை மீட்க வேண்டி , பரமசிவனைத் துதித்து ஒரு பதிகம் பாடி வேண்ட, சிவனருளினால் மகவு மீண்டும் உயிர் பெற்றதாக வரலாறு.
இதை பற்றி இன்று ஒரு பாடல்.

அன்புடன்
ரமேஷ்

பி.கு :
இத்தலம் பற்றிய வேறு விவரங்களையும், மேலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ள ஸ்தல புராணத்தைப்  பற்றிய முழுவிவரத்தையும்    கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://temple.dinamalar.com/New.php?id=491


அவினாசி அப்பன்

கவின்தா மரைக்குளத்தில் கருமுதலை கவ்வியே ஒருமகனும் உயிர்           இழந்தததால்

தவிக்கின்ற தாய்தந்தை துயர்தீர்க்க வேண்டியே சுந்தரரும் பதிகம் பாட

கவிதையினைச் செவிமெடுத்த புவியாளும் சிவனருளால் உயிர்பெற்று மகனும் மீண்டான்!

அவினாசித் திருத்தலத்தில் பெருங்கருணைத் தாயோடு அமர்ந்தருள்வோன் கருணை என்னே!

3 comments: